search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்டல அலுவலகம்"

    • நிகழ்ச்சிக்கு நகரமைப்பு அலுவலர் முரளி தலைமை தாங்கினார்.
    • கார் வெங்கடேசன், லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகரா ட்சிக்குட்பட்ட திருப்பாதி ரிப்புலியூர் சரவணா நகர், கடலூர் முதுநகர் சோனகர் தெரு ஆகிய இடங்களில் மண்டல குழு அலுவலகம் அமைக்க ரூ 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மண்டல அலுவலகம் கட்டுவதற்கு இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகரமைப்பு அலுவலர் முரளி தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் சலீம், மண்டல குழு தலைவர்கள் சங்கீதா செந்தில் முருகன், இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர் சாய்துனிஷா சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் திருப்பா திரிப்புலியூர் சரவணா நகர், முதுநகர் சோனகர் தெரு ஆகிய இடங்களில் மண்டல குழு அலுவலகம் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டு தேர்வு செய்தனர். இதில் தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, மாநகராட்சி கவுன்சிலர் சரஸ்வதி வேலுச்சாமி, மாநகராட்சி பொறியாளர் மாலதி, தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, பகுதி துணை செயலாளர்கள் கார் வெங்கடேசன், லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×